அன்றைய குழந்தை இன்று பருவம் எய்தியது
நம்முடைய அன்றைய குழந்தை
இன்று பருவம் எய்தியது
நம்முடைய periyavaarul.wordpress.com குழந்தை இன்று பருவம் எய்தியது. இன்று நீங்கள் நம்முடைய அலங்கரிக்கப்பட்ட குழந்தையை பார்த்து ஆசீர்வாதம் செய்ய வேண்டிய நாள். இன்று முதல் நம்முடைய பதிவுகள் அணைத்தும் புதிய இணைய தளமான periyavaarul.com இல் வெளியாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
உறுப்பினர்கள் மட்டுமல்லாது பார்வையாளர்களுக்கும் இந்த இணைய தளம் இனிய அழைப்பு விடுகிறது. வழக்கம் போல் உங்களுடைய அன்பயும் ஆதரவையும் தொடர்ந்து அளித்து இந்த இணைய தளம் மேலும் வளர உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன்
உங்கள் வரவு நாள் வரவாகுக.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்
திவ்ய தேச தரிசனங்கள் -004 உத்தமர் கோவில்
இன்று இந்த திவ்ய தேச பதிவு வண்ணப்படங்களுடன் நம்முடைய புதிய இணைய தளமான. periyavaarul.com வெளியாகி உள்ளது. அங்கும் பார்த்து பெருமாளை சேவித்து உங்கள் எண்ணங்களை அங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
திவ்ய தேச தரிசனங்கள் -004
உத்தமர் கோவில் அல்லது திருக்கரம்பனூர்
இந்த அற்புதமான திருக்கோவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் சமயபுரம் டோல் கேட்டிற்கு அருகில் உள்ளது. இந்த திருத்தலத்தின் சிறப்பு பிரும்மா சிவன் திருமால் மூவரும் ஒரே கோவிலில் தரிசனம் தருவது. உத்தமர்கோவிலை வைஷ்ணவ திருத்தலங்களின் பெயரான திருக்கரம்பனூர் என்றும் அழைப்பார்கள்..
மும் மூர்த்திகள் தங்களது மனைவிமார்களுடன் தரிசனம் தருவதால் இங்கு குடும்பத்துடன் வந்து வழிபட்டால் உங்கள் இல்லத்தில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகம்.. இந்த திருத்தலம் திருமங்கை அழவாரல் மங்களா சாசனம் செய்யப்பட்து..
நூற்றி எட்டு வைணவ திருத்தலங்களில் உத்தமர் கோவிலும் ஒன்று. .சிவபெருமானின் திருக்கோலங்களில் ஒன்றான பிச்சாண்டார் இங்கு தான் திருக்கோலம் பூண்டது. அதனால் தான் இந்த திருத்தலத்திற்கு பிச்சாண்டார் கோவில் என்ற பெயரும் ஏற்பட்டது.
இங்கு பிரும்மா ஞான சரஸ்வதியுடன் தம்பதி சமேதராக தரிசனம் கொடுக்கிறார்… ஒரு முறை சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற போட்டியில் பிரும்மா சிவபெருமானின் அடிமுடியை காண முயன்று தோல்வி அடைந்து சிவபெருமானின் தலையில் இருந்து கீழே விழுந்த தாழம்பூவுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார்.
அதன்படி சிவபெருமான் அடிமுடியை பிரும்மா பார்த்து விட்டதாக தாழம்பூ பொய் சாட்சி சொல்லியது. உண்மையை உணர்ந்து கொண்ட சிவபெருமான் பிரம்மாவிற்கு ஒரு சாபம் இட்டார். இனிமேல் உனக்கென்று எந்தக்கோவிலிலும் தனியாக சன்னதி இருக்காது என்று.. அதே போல் தாழம்பூவிற்கு ஒரு சாபம் கொடுத்தார். உன்னை யாரும் பூஜிக்கும் மலர்களில் ஒன்றாக பயன் படுத்த மாட்டார்கள் என்று.,
பிறகு பிரும்மா மனம் வருந்தி சிவபெருமானை தியானித்து தவத்தில் இருந்தார். பிரும்மாவின் தவ வலிமையை பார்த்து மகிழ்ந்த சிவபெருமான் பிறகு இங்கயே உனக்கென்று ஒரு தனி சன்னதி உருவாகும் என்று வரம் கொடுத்தார்.. அதன்படி இங்கு பிரும்மா தன்னுடைய மனைவி சரஸ்வதியுடன் தரிசனம் கொடுக்கஆரம்பித்தார்.
இங்கு கல்விக்கடவுளான சரஸ்வதி தெற்கு பார்த்து தனி சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள். வழக்கமாக கையில் வைத்திருக்கும் வீணைக்கு பதிலாக ஏட்டு சுவடியை கையில் வைத்திருக்கிறாள். மற்றொரு கையால் அபய ஹஸ்த முத்திரை கொடுக்கிறாள்.
இங்கு பள்ளிக்கு போகும் குழந்தைகள் வேண்டி வணங்கிக்கொண்டால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதே போல் உத்தியோகத்தில் பதவி உயர்வு போன்றவற்றிற்கு வேண்டிக்கொண்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இங்கு விஷ்ணு பகவான் புருஷோத்தமன் என்ற பெயரால் கிழக்கு நோக்கி பள்ளிகொண்டு திருமார்பில் மஹாலக்ஷ்மியை தாங்கிக்கொண்டிருக்கிறார்.. தாயாரின் திருநாமம் பூரணவல்லி தயார் தனி சன்னதியில் அழகின் மறு உருவமாக காட்சி தருகிறார்.
ஒரு முறை சிவபெருமான் பிரும்மாவின் நான்கு தலைகளில் ஒன்றை கொய்து விட்டதால் பிரும்மஹத்தி தோஷத்திற்கு ஆளாகி பிச்சை பாத்திரம் ஏந்தி அலைந்தார். பிறகு இங்குள்ள பூரணவல்லி தயார் தான் பிச்சையிட்டு தோஷ நிவர்த்திக்கு வழி வகுத்தாள்.இந்த தாயாரை வழிபட்டால் உங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். சங்கடங்கள் விலகும் என்பது அன்றில் இருந்து இன்று வரை கடைபிடிக்கும் ஒரு பிரார்த்தனை..
பிச்சாடனராக காட்சி கொடுக்கும் சிவபெருமானை இங்கு வழிபட்டால் துர் சிந்தனைகள் அகலும் கெட்ட செயல்கள் அறவே அற்றுப்போகும்.தசரத சக்கரவர்த்தி பிள்ளை பாக்கியம் வேண்டி வழிபட்ட சிவலிங்கம் இன்றும் இங்கு உள்ளது. இதற்கு தசரத லிங்கம் என்று பெயர். பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து அர்ச்சித்து வழிபட்டால் நிச்சயம் பிள்ளை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
இங்கு ஏழு குருமார்களும் ஒரு சேர காட்சி கொடுக்கின்றனர். சிவ குரு, விஷ்ணு குரு பிரும்ம குரு ஸ்ரீ சக்தி குரு தேவா குருவாகிய பிரகஸ்பதி அசுரர் குருவான சுகராச்சாரியார் ஸ்ரீ சுப்ரமணிய குரு ஆகிய சப்த குரு மார்களும் இங்கு தரிசனம் கொடுக்கின்றனர். இவர்களை வழிபட்டால் உங்களுக்கு குருவே இல்லை என்ற ஏமாற்றமும் ஏக்கமும் தொலைந்து போகும்.
வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஏழு குரு மார்களையும் வணங்கி பிறகு மும் மூர்த்திகளையும் தம்பதி சமேதராக வணங்கினால் கல்வி ஞானம் கேள்வி ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம். .இவ்வாறு வணங்கினால் கல்வியில் மேன்மை தெளிந்த ஞானம் சகல யோகம் வியாபார அபிவிருத்தி மனதுக்கு பிடித்த திருமணம் கண்ணுக்கு அழகான குழந்தைகள் போன்றவைகள் வாய்க்கப்பெறுவர்கள்.
மாணவர்கள் இங்கு ஒரே ஒரு முறை வழிபட்டாலும் குரு யோகம் கைகூடும். கல்வி மேன்மை பெறும். அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வில் நல்ல முறையில் தேர்ச்சி அடைவார்கள்.
வழிபாட்டு நேரம் : காலை 06.30 மணி முதல்12.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல 08.00 .மணி வரை
தொலை பேசி : 0431-2591-466 – 2591040
உங்கள் பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் அதாவது கண்ணுக்கும் மனதுக்கும் பிடித்த கணவன் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகான குழந்தைகள் உங்கள் குழந்தைகளுக்கும் உங்களுக்கும் கேள்வி ஞானம் சிறந்து விளங்கவும் உங்கள் இல்லங்களில் ஐஸ்வர்யம் பெருகவும் இறை அமைதியும் ஆனந்தமும் நிரம்பி இருக்கவும் உத்தமர் கோவிலுக்கு ஒரு முறை குடும்பத்துடன் சென்று தரிசித்து வரவும்.நீங்கள் கேட்டது அனைத்தும் கிடைக்கும்.
ஓம் நமோ நாராயணா ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்
மஹாபெரியவா பக்த கோடிகளே உங்கள் கவனத்திற்கு
குருவே சரணம் குரு பாதமே சரணம்
மஹாபெரியவா பக்த கோடிகளே
உங்கள் கவனத்திற்கு
நம்முடைய இன்றைய பதிவான என்வாழ்வில் மஹாபெரியவா தொடர் எண் 037 இந்த இணைய தளத்தில் மட்டுமல்லாது நம்முடைய புதிய இணையதளமான periyavaarul.com லும் வெளியாகி இருக்கிறது. ஆகவே இன்றிலிருந்தே நீங்கள் புதிய இணைய தளத்திற்கு வருகை புரிந்து பதிவுகளை படித்து உங்கள் எண்ணங்களை அங்கே பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நம்முடைய புதிய இணையதளம் வருகிற பதினாறாம் தேதி மஹாபெரியவா திரு நக்க்ஷத்திரமான அனுஷம் நன்னாளான 16/12/2017 சனிக்கிழமை அன்று உலகில் உள்ள எல்லா பக்தர்களுக்காகவும் சமர்க்கிப்படுகிறது.
இந்த புதிய இணைய தளம் உங்களின் வசதிக்காக கோவில்களின் படங்கள் மற்றும் புராதன சிற்பக்கலைகளின் படங்கள் மஹாபெரியவாளின் பலவேறு கட்டங்களில் எடுத்த படங்கள் எல்லாவற்றையும் கண்ணை கவரும் வண்ணங்களை தாங்கி வெளிவருகிறது.
நம்முடைய குழந்தை இன்று பருவமெய்தி வளர்ந்து நிற்கிறது. இனி இந்த வளர்ந்த குழந்தையை சீராட்டி பாராட்டி வளர்க்கவேண்டியது நம்முடைய கடமையாகிறது.
உங்கள் வருகையை உறுதிப்படுத்தும் விதத்தில் இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளில் கமெண்டுகளாக இங்கே பதிவு செய்தால் என்னுடைய மனச்சோர்வும் உண்டால் சோர்வும் நொடியில் நீங்கி உங்களுக்கு புதிய புத்துணர்ச்சியுடன் சேவை செய்யும் பாக்கியத்தை நான் பெற்றவன் ஆவேன்.
புதிய இணையத்திற்கு
உங்கள் வருகையை ஆவலுடன் எதிர் நோக்கும்
என்றும் உங்கள் காயத்ரி ராஜகோபால்
என் வாழ்வில் மஹாபெரியவா -037
என் வாழ்வில் மஹாபெரியவா -037
இதை பின்பற்றுங்கள்
ஒரு நல்ல சிஷ்யனுக்கு
உண்டான குணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
ஒரு குரு உங்களை அழைப்பார்
அல்லது இறைவன் உங்களுக்கு
ஒரு நல்ல குருவை காண்பிப்பார்
இது சத்தியம்
நல்ல சிஷ்யனுக்கு உண்டான
குணங்களை தனியாக எழுதுகிறேன்
ஒவ்வொருவர் வாழ்க்கையையும் இரண்டாக பிரிக்கலாம். அறுபது வயதுக்கு முன் அறுபது வயதுக்கு பின். இதை முன் அறுபது பின் அறுபது என்று பிரித்து கொள்ளலாம். முன் அறுபது என்பது குழந்தை பருவத்தில் இருந்து பால்யத்தையும் தாண்டி ஒரு குடும்பஸ்தன் ஆகும் வரையில் கடக்கும் பருவம் வரை..
பின் அறுபது என்பது வயோதிகமும் வயோதிகத்தையும் தாண்டி இறுதி நாள் வரையில் வாழும் பருவம்.. முன் அறுபது என்பது வாழ்ந்து முடிந்த காலம். வாழ்ந்து முடிந்த காலம் என்று இறந்த காலத்தில் சொல்வதால் அந்த கடந்த காலத்தை நம்மால் எதுவும் செய்ய முடியாது.
ஆனால் பின் அறுபது என்பது இன்னும் நம் கையில் தான் உள்ளது. இங்குதான் வாழ்க்கை வாழ்வதற்கே நம் வாழ்க்கை நம் கையில் என்ற சொற்றொடர் மிகவும் பொருத்தமாக இருப்பதை உணர்கிறோம்.
முன் அறுபது என்ற கடந்த காலத்தை நம்மால் ஒன்றும் செய்ய இயலாமல் இருக்கலாம். காலம் வேண்டுமானால் கடந்து சென்றிருக்கலாம். ஆனால் கடந்த காலம் நமக்கு கொடுத்த ஞானத்தையும் அனுபவத்தையும் யாரும் ஒன்றும் செய்து விட முடியாது.. நம் அனுபவம் நம் கையில் நம் வாழ்க்கை நம் கையில். இதுதான் வாழ்க்கை என்னும் தத்துவத்தின் உள் அர்த்தம்.
முன் அறுபதில் மோசமான வாழ்க்கை வாழ்ந்து விட்டோமே. அதனால் வாழ்க்கையே வீணாகி விட்டது என்ற கவலை வேண்டாம்…மனிதர்கள் வேண்டுமானால் வாழ்க்கையை ஒரு வியாபாரமாக பார்க்கலாம்..ஆனால் இறைவன் வாழ்க்கையை எப்படி பார்க்கிறான் தெரியுமா?. முன் அறுபத்தின் மூலம் பெற்ற அனுபவத்தையும் ஞானத்தையும் வைத்து பின் அறுபதில் எப்படி வாழ்கிறான் என்றுதான் பார்க்கிறான்..
உண்மையான வாழ்க்கை எது தெரியுமா. பின் அறுபதுதான் உண்மையான வாழ்க்கை. முன் அறுபதின் அனுபவமும் ஞானமும் மட்டுமே பின் அறுபதின் வாழ்க்கைக்கு வித்திடுகிறது. முன் அறுபதில் எல்லா மனிதர்களுமே தெரிந்தோ தெரியாமலோ பாவங்களை செய்து விடுகிறார்கள். ஒவ்வொரு பாவமும் நம் ஞானக்கண்ணை திறக்கிறது.
வாழும்பொழுது மரணத்தை பற்றி கவலைப்படாமல் ஆட்டமாய் ஆடுகிறான். மரணத்தின் பொழுது வாழ்ந்த வாழ்க்கையை பற்றி கவலை படாமலேயே உயிரை விடுகிறான். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வாழ்க்கை. என்னும் நாடகத்தில் என்ன ஒரு ஆட்டம். எல்லாமே சாஸ்வதம் என்று நம்புகிறான். தானே ஒரு கதா பாத்திரமாகி வாழ்க்கை என்னும் நாடகத்தில் நடிக்கிறான்.
சென்றதை விடுங்கள். இந்த நொடியில் இருந்து எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். இறைவனும் இறைவனுக்கு சாட்சியாக பஞ்ச பூதங்களும் நம்முடைய செயல்களை கவனித்துக்கொண்டே இருக்கின்றன.. வாழ்க்கையின் முன் பாதியில் இழைத்த பாவங்களை பின் பாதியில் கழுவுகொள்ளலாம். நம்முடைய உண்மையான முயற்சிக்கு இறைவனும் நம்முடன் துணை இருப்பான்.
இப்பொழுது நான் இருக்கும் சூழ்நிலையும் இதுதான். முன் பாதியில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை இறைவன் துணையோடு போக்கிக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் இதுநாள் வரையில் பட்ட கஷ்டங்களும் பாவங்களும் என்னை வாட்டின. தவறை உணர ஆரம்பித்தேன். இரவுகளில் தூக்கமில்லாமல் அவதிப்பட்டேன்.
இறைவனிடமே கெஞ்சியிருக்கிறேன். எப்படி தெரியுமா? இறைவா இன்று ஒரு நாள் மட்டும் கவலையை மறந்து தூங்க தூக்கத்தை கொடு என்று.. இப்படி நான் கெஞ்ச வேண்டுமானால் ஒரு நல்ல தூக்கத்திற்கு நான் எவ்வளவு ஏங்கி இருக்கக்கூடும்.
என்னை சுற்றி இருட்டாக இருக்கும் பொழுது அது எனக்கு பாதுகாப்பு என்று எண்ணினேன்.பொழுது விடியப்போகிறதே என்று எண்ணும்பொழுது எனக்குள் ஒரு குலை நடுக்கமும் இதயமே வெடித்து விடும் போல சோகம். என்னை கவ்விக்கொள்ளும்.
எல்லோருக்கும் சூரிய உதயம் ஒரு நாளின் துவக்கம் என்றால் எனக்கு மட்டும் சூரிய அஸ்தமனம் தான் நாளின் துவக்கம்…வாழும் நாளிலேயே நான் நரகத்தை பார்த்தது மட்டுமல்ல அனுபவித்தும் இருக்கிறேன். படிப்பிருந்தும் ஞானம் இருந்தும் எனக்கும் என் வாழ்க்கைக்கும் எதுவும் பயன் படவில்லையே.. இதுதான் கர்மாவோ?
நான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும் நான் பட்ட வேதனைகளையும் இவ்வளவு வெளிப்படையாக சொல்வதில் எனக்கு கூச்சமோ வெட்கமோ இல்லை. என்னுடைய அனுபவத்தால் ஒரு ஆத்மா நம்பிக்கையுடன் வாழ்ந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றால் அது என் ஆத்மாவிற்கு கிடைத்தவெற்றி.
என் வாழ்க்கையின் வெற்றியில் இருந்து மஹாபெரியவாளை நிச்சயம் பிரிக்க முடியாது. உண்மையாகச்சொல்கிறேன் மஹாபெரியவா என்னை அழைத்து ஆட்கொள்ளவில்லையென்றால் நான் இன்றும் திசை தெரியாமல் காற்றில் பறக்கும் குப்பை காகிதமாக தான் இருந்திருப்பேன்..
ஆனால் நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் என்னை குருவின் தேவையை மட்டுமல்ல குருவின் முக்கியத்துவத்தையும் உணர வைத்தது. ஒரு குருவை தேடி. அலைந்தேன். ஒரு நல்ல குரு.வுக்கு ஏங்கினேன்.இறுதியில் இறைவனே என்னை அழைத்து நான்தான் உனக்கு குரு என்று சொல்லி அழைத்து ஆட்கொண்டார்.
நான் பட்ட கஷ்டங்களையும் கவலைகளையும் உங்களிடம் ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து வருகிறேன். ஏன் தெரியுமா? நான் ஒளிவு மறைவில்லாமல் சொன்னால்தான் உங்களுக்கு வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும். தேவையும் அவசியமும் உங்களுக்கு உங்களுக்கு புரியும்..
என் சிந்தனை தெளிவானது. எண்ணங்களில் ஒரு புனிதத்தை கண்டேன்..இங்குதான் மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச சக்தி என்னை அழைத்து ஆட்கொண்டது.. எனக்கு வாழ்க்கை பயணத்தின் பாதை தெரிந்தது. இப்பொழுது மஹாபெரியவா கையை பிடித்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.. இங்கு தான் மஹாபெரியவா என் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த நேரம்.
ஒரு சிஷயனுக்கு உண்டான தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒரு குரு உங்களை அழைப்பார் அல்லது இறைவன் உங்களை ஒரு குருவிடம் கொண்டு விடுவார். இந்த இரண்டில் ஒன்று நிச்சயம்.. என் அனுபவத்தில் நான் கண்டது இது.
இதுவரை என் வாழ்க்கை அனுபவத்திற்கும் மஹாபெரியவா அற்புதங்களுக்கும் இடையே நடக்கும் இனிமையான போராட்டங்களையும் என் அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன்.
இந்த வார அற்புத அனுபவங்களை எழுதுவதற்கு முன்பாக வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களுக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்களுக்கும் என்னுடைய அனுபவங்கள் மூலம் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்தால் வாரம் தோறும் மஹாபெரியவா நிகழ்த்தும் அற்புதங்கள் மூலம் ஏற்றிய ஒளியை தூண்டி விட்டு ப்ரகாசப்படுத்த முடியாதா என்ற நம்பிக்கைதான் என் இந்த முயற்சி..
என் ஒரு விரல் வலியை கூட நான் பொருட்படுத்துவதில்லை. என் முயற்சி வெற்றி அடைய வேண்டும்.. இந்த அறிவுரையை இத்துடன் நிறுத்திக்கொண்டு இனி அற்புதங்களுக்கு உங்களை அழைத்துக்கொண்டு பயணிக்கிறேன்.
மஹாபெரியவா அற்புதங்களை சரீர சுத்தி ஆத்ம சுத்தி பூர்ண சுத்தி என்று மூன்று வகையான தலைப்புகளில் உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன்.
சென்ற வாரத்தில் இருந்து என் சரீர சுத்தி பிரிவில் என்னுடைய உணவு பழக்கவழக்கங்களில் ஒரு பெரிய மாற்றத்தை மஹாபெரியவா கொண்டு வந்த்திருக்கிறார். இதன் ஆரம்பமாக சென்ற வாரத்தில் இனிப்பு என்பதை ஒரே இரவில் அடியோடு ஒழித்தார்.
இது சம்பந்தமாக நான் சந்தித்த மனப்போராட்டங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இனி இந்த வார அற்புதத்திற்கு வருவோம்..பொதுவாகவே மஹாபெரியவாளின் சரீர சுத்தி உத்தரவுகள் இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் வரும்.
அதனால் ஒவ்வொரு இரவும் ஒன்பது மணிக்கு இன்று என்ன உத்தரவு வருமோ என்று பயந்துகொண்டே இருப்பேன்.. அன்றும் அப்படிதான் ஒரு உத்தரவு வந்தது. என்ன உத்தரவு என்பதை இந்தப்பதிவின் பிற்பகுதியில் கூறுகிறேன்.
என்னுடைய உணவு பழக்கவழக்கங்களில் என்னால் விட முடிந்தவை விடவே முடியாதவை என்று இரண்டு வகை உணவு பழக்கவழக்கங்கள் உண்டு… என்னால்.விடவே முடியாது என்னும் உணவுப்பழக்கத்தில் அரிசி சாதம் டீ காபி வெங்காயம் பூண்டு வகை உணவுகள் ஹோட்டல் உணவு வகைகள் ஆகியன. மேலே குறிப்பிட்ட உணவு வகைகளில் எதையும் இன்று என்னை விட சொல்லக்கூடாது என்று வேண்டிக்கொண்டே இருந்தேன். . என்னை நேர் படுத்த வந்த ஆசானிடமே ஒரு வேண்டுதல்.. இது எப்படி இருக்கிறது.?
எனக்கு சிறு வயதில் இருந்தே அரிசி சாதம் என்றால் உயிர், இரவு என்ன உணவு இருந்தாலும் கடைசியில் சாப்பிட ஒரு வாய் தயிர் சாதமாவது வேண்டும். என்னுடைய பாட்டி என்னை சோற்றால் அடித்த சுவர் என்று கேலி பேசிக்கொண்டே இருப்பாள்.இரவில் ஒரு வாய் தயிர் சாதம் இல்லையென்றால் எனக்கு சாப்பிட்டது போலவே இருக்காது.அப்படியொரு பைத்தியம் சாதத்தின் மேல்.
நாங்கள் குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்றோமானால் எல்லோரும் அவரவர்களுக்கு பிடித்த பண்டங்களை கேட்பார்கள். ஆனால் நான் மட்டும் ஹோட்டல் முதலாளியிடம் கேட்பேன். ஒரு வாய் தயிர் சாதம் கிடைக்குமா.என்று. அவரும் வந்த நபர்களின் எண்ணிக்கையை பார்ப்பார் மொத்த தொகையை கணக்கெடுப்பர்.. பிறகு முடிவு செய்வார். முடிவு செய்து என்னிடம் சொல்லுவார்.
நீங்கள் மற்ற பண்டங்களை சாப்பிட்டு முடிப்பதற்குள் சாதம் வடித்து தயிரும் கொடுக்கச்சொல்கிறேன் என்பர். என்னுடன் வந்தவர்கள் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. என்னை பின்வருமாறு திட்டுவார்கள். “ஒரு மனுஷனுக்கு அப்படி என்னடா நாக்கு.” இப்போ நாங்கள் எல்லோரும் இருப்பதை சாப்பிடல்லை. என்று என்னை வசை படுவார்கள். என்ன செய்வது. என் மனசையும் நாக்கையும் கட்டுப்படுத்த முடியலை.
நான் இத்தனையும் ஏதற்கு எழுதுகிறேன் என்றால் என்னால் கட்டுப்படுத்தவே முடியாத ஒரு பழக்கத்தை ஒரே இரவில் எப்படி மஹாபெரியவா கட்டுப்படுத்தினர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.என்பதற்காகத்தான்.
அன்றைய அற்புதத்தின் ஆரம்பம்:
இரவு ஏழு மணி. என்னுடைய ஸஹஸ்ரநாம பாராயணத்தை முடித்துக்கொண்டு காயத்ரி ஜெபத்திற்கு உட்கார்ந்தேன்.நான் வழக்கமாக காலையில் பிரும்ம முகூர்த்த பிரார்த்தனைக்கு பிறகு ஒரு சஹஸ்ர காயத்ரி ஜெபமும் மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு பிறகு ஒரு சஹஸ்ர காயத்ரியும் ஜெபிப்பேன்.
அன்றும் நல்லபடியாக முடித்து விட்டு மஹாபெரியவாளிடம் நான் என் அனுஷ்டானங்களை முடித்ததை சொல்லிவிட்டு இரவு சாப்பிட உட்கார்ந்தேன்.இரவில் வழக்கமாக இரண்டு தோசைகளும் புளி போடாமல் பாசிப்பருப்பு குழம்பும் சாப்பிடுவேன்.. அன்றும் எனக்கு பாசிப்பருப்பு குழம்பு. ஆனால் மற்றவர்களுக்கு எண்ணெய் மிளகாய் பொடி .முருங்கைக்காய் சாம்பார் சர்க்கரை எல்லாம்..
இங்குதான் நான் ஒன்றை உணர்ந்தேன். கண்ணுக்கு முன் இவ்வளவு பண்டங்கள் வைத்திருந்தும் என் கவனமெல்லாம் புளி இல்லாத பாசிப்பருப்பு மேலயே இருந்தது. நான் எந்த நிலையிலும் நாக்கையும் என் மனதையும் என்னிடம் இருந்து இழக்கவேயில்லை.
மற்றவர்கள் கூட மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். இது எப்படி சாத்தியம். கண்ணுக்கு முன்னால் எல்லோரும் சாப்பிடுகிறோம் ஆனால் உங்கள் நாக்கு மட்டும் எப்படி நீங்கள் சொல்வதை கேட்கிறது என்றார்கள்.
மேலும் அன்றைக்கு இருந்த முதியவர்கள் சொன்னார்கள் நீண்ட நாட்கள் கடுமையான தவம் செய்தால் தான் ஒருவரால் நாவையும் மனதையும் அடக்க முடியும். உங்களால் எப்படி முடிகிறது என்று கேட்டார்கள்.
நான் ஒன்றை மட்டும் உணர்ந்தேன்.என்னுடைய நாக்கையும் மனதையும் என்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. இந்த சரீர சுத்தி அற்புதத்தை ஒரே வரியில் சொல்லி விடலாம். பெரியவா இதை விடச்சொன்னார் நான் விட்டேன் என்று.
ஆனால் அற்புதத்தின் ஆழத்தையும் அடி நாதத்தையும் நான் அடைந்த மனப்போராட்டங்களையும் உங்களால் புரிந்து கொள்ள முடியாது.. நானே நான் அனுபவித்த அற்புதங்களை எழுதும் பொழுதான் உணர்கிறேன்.
நான் ஒரு காவி அணியாத ஒரு சன்யாசி:
அன்று வீட்டில் இருந்தார்கள் எல்லோரும் ஒரு சேர சொன்னது “நான் ஒரு காவி அணியாத ஒரு சன்யாசி என்று” எனக்கு இந்தவார்த்தைகள் மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் அன்று வரை நான் விட்டதையெல்லாம் பட்டியலிட்டார்கள்.எனக்கே மலைப்பாக இருந்தது. நானா இவ்வளவையும் விட்டேன் என்று எனக்குள் சொல்லமுடியாத மகிழ்ச்சியாக இருந்தது.
சொந்தங்களிடம் இருந்து இந்த வார்த்தையை வாங்குவதற்கு அறுபது வருடம் காத்திருந்தேன். அதுவும் மஹாபெரியவா என் வாழ்வில் அடி எடுத்து வைக்கவில்லை என்றால் நான் என்னவாக ஆகியிருப்பேன் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. .
அப்பொழுதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. மஹாபெரியவா என்னை ஒன்றை விட சொல்வதற்கு முன் என் மனதை தயார் நிலையில் வைத்து விட்டுத்தான் என்னிடம் விட சொல்கிறார். என்னாலும் விட முடிகிறது.
இப்படியே சாப்பிட்டுவிட்டு நான் என்னுடைய பதிவுகளை எழுதிக்கொண்டிருந்தேன். நேரம் சரியாக எட்டு மணி முப்பது நிமிடங்கள்.. எந்த நேரமும் மஹாபெரியவாளின் சரீர சுத்தி ஆணை வரலாம். நான் மனதுக்குள் வேண்டிக்கொண்டே இருந்தேன்,என்னை சரி செய்ய வந்த ஆசானிடமே ஒரு கோரிக்கை. எனக்கு சிரிப்பாக இருந்தது
மணி ஒன்பதை தொட்டு விட்டது. “ஏண்டா” என்னும் சொல் என் காதிற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் கேட்டு விடும்.
அற்புதம்:
சரியாக மணி ஒன்பது. ஏண்டா ” குரல் கேட்டு விட்டது. சொல்லுங்கோ பெரியவா உங்கள் குரலை கேட்கத்தான் காத்திருந்தேன் என்றேன்.
பெரியவா: என் குரல் வராமல் இருந்திருந்தால் நீ சந்தோஷமாக இருந்திருப்பாய் இல்லையடா.
G.R.: ஐயையோ அப்படி இல்லை பெரியவா. நீங்கள் என்னை எதை விடச்சொன்னாலும் என் மனதையும் நாக்கையும் நீங்கள் அடக்கி விட்டுத்தான் என்னிடம் சொல்லுகிறீர்கள். இல்லாவிட்டால் என்னால் இப்படி ஒரே ராத்திரியில் விட முடியுமா என்று கேட்டேன்.
பெரியவா: ஏண்டா குழந்தையில் இருந்து உனக்கு பிடித்த உணவு எது என்று கேட்டார்.
G.R. சாதம் பெரியவா என்றேன்.
பெரியவா: அப்போ அறுபது வருஷமா சாதம் சாப்பிட்டுண்டே இருக்கே. என்ன சாதித்தாய். வயிறு எல்லாம் போட்டு சர்க்கரை வியாதியையும் வரவழிச்சுண்டு இப்போ .பக்கவாதத்தால் கையையும் காலையும் இழந்து நிக்கறே.இன்னும் சாப்பிடணுமா. வேண்டாமே விட்டுடேன் என்றார்.
G.R.: பெரியவா நான் எல்லாத்தையும் ஒரே ராத்திரியில் விட்டுடுவேன்.ஆனால் சாதம் விடுவதற்கு மட்டும் எனக்கு ஒரு பத்து நாட்கள் அவகாசம் கொடுங்கள் பெரியவா என்றேன்.
பெரியவா: பத்து நாளிலே மேலே மேலே சாப்பிட்டு என்ன காணப்போகிறாய். வாழ்க்கையில் ஒன்றை மறந்து விடாதே. வாழ்க்கையில் எல்லா படிப்பும் இருந்து ஞானமும் இருந்தும் நிறைய பேர் தோத்துபோறாளே ஏன் தெரியுமா?
ஒரு நல்ல விஷயத்தை முடிவு செய்தால் அந்த வினாடியே அதை செயல்படுத்தனும். தள்ளிப்போட தள்ளிப்போட உன்னுடைய மனசு உன்னை வேறு திசைக்கு இழுத்து செல்லும். உனக்காக காத்திருந்த பொன்னான வாய்ப்புக்கள் அணைத்தும் உன்னை விட்டு விலகி விடும்.. மறுபடியும் வந்த வாய்ப்புகள் எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது.உனக்கு அந்தநிலைமை தேவையா. வேண்டாமே மத்தவாளும் இதை தெரிஞ்சுக்கட்டும்… இதை நான் சொன்னதாக எழுது என்றார்.
பிராப்தம் இருக்கறவா படிக்கட்டும்.. யார் படிக்கிறாளோ அவா மனசுலே நிச்சயம் ஒரு மாற்றம் வரும்..படித்தவர்கள் உன்னிடமே சொல்லுவார்கள். அதுனாலே நீ இந்த நொடியில் இருந்து அரிசி சாதத்தை விட்டுடு. மத்தியானம் கோதுமை சாதம் சாப்பிடு. உன்னால் நிச்சயம் முடியும். என்ன விட்டுடறயா. என்று மிரட்டும் தொனியில் கேட்டார்.
உன்னை வைத்துதான் நான் எல்லோர்க்கும் சொல்லறேன்.இதுவே உனக்கு பெரிய புண்ணியம். இந்த நொடியில் இருந்து நீ அரிசி சாதம் சாப்பிடக்கூடாது. என்றார்
G.R.: பெரியவா கோவில் ப்ரசாதங்களுக்கு விதி விலக்கு உண்டா பெரியவா என்றேன்.
பெரியவா: உனக்கு எங்கே சாதம் சாப்பிட வாய்ப்பு கிடைக்கும்னு பாத்துண்டே இரு. சாப்பிடு கோவில் ப்ரசாதங்களுக்கு பாதகம் இல்லை நன்னா சாப்பிடு என்றார்
மஹாபெரியவாளின் இந்த பயிற்சி
எனக்குமட்டுமல்ல உங்களுக்கும் தான்
என்னுடைய தாத்தாவை நான் பார்த்ததில்லை
பார்த்திருந்தாலும் இப்படி ஒரு
தாத்தாவை பார்த்திருக்க மாட்டேன்
அந்த வானத்தில் இருக்கும் பரமனே
குருவாகவும் தாத்தாவாகவும் எனக்கு
வாய்க்கவேண்டும் என்றால்
இது யார்செய்த பாக்கியம்
எவருடைய புண்ணியம்? நான் யார்?
எல்லாமே பதில் இல்லாத கேள்விகள்
இருந்தாலும் உண்மை நிலையை உணர்ந்து விட்டேன்
என்னை அழைத்து ஆட்கொண்ட பரமேஸ்வரன்
உங்களை ஆட்கொள்ள எவ்வளவு நேரம் ஆகும்
இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்..
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-032
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-032
பிரதி புதன்கிழமை தோறும்
குமரேசன் மாமா தம்பதியினர்
இந்தத்தொடர் இந்த வாரத்திலிருந்து மஹாபெரியவளுக்கு கைங்கர்யம் செய்துகொண்டிருந்த இப்பொழுதும் செய்துகொண்டிருகிற புண்ணிய ஆத்மாக்களை பற்றி எழுத முடிவு செய்தேன். இந்த முயற்சி மஹாபெரியவளின் உத்தரவு.
இன்று காலை நான் பூஜையில் இருந்தபோது பின்வருமாறு மஹாபெரியவா உத்தரவிட்டார்.
“ஏன்டா நீ எல்லா பக்தர்களின் அனுபவங்களையும் எழுதிண்டு இருக்கே. எனக்கு கைங்கர்யம் பண்ண ஆத்மாக்களை பற்றி எப்போ எழுதப்போறே. நான் சொன்னேன் நீங்கள் உத்தரவு கொடுத்தால் இப்பவே ஆரம்பிச்சுடறேன் பெரியவா.என்று. இன்னிக்கே ஆரம்பிடா. என்று சொன்னவுடன் இன்றே ஆரம்பித்து விட்டேன்.
இந்தத்தொடரின் முதல் அணுக்கத்தொண்டர் குமரேசன் மாமா. அன்றிலிருந்து இன்றுவரை ஸ்தூலத்திலிருந்து சூஷ்மம்வரை மாமா அவருடைய இறைப்பணியை தொய்வில்லாமல் மனமுருகி செய்து வருகிறார். மாமாவின் எண்ணங்கள் செயல்கள் எல்லாவற்றிலும் மஹாபெரியவாதான்.
நமெக்கெல்லாம் பரமேஸ்வரன் அனுகிரஹித்தாலோ கனவில் தரிசனம் கொடுத்தாலோ அல்லது நம் பிரார்த்தனைக்கு செவி சாய்த்தாலோ நமக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்து விட்டதாக சந்தோஷப்படுவோம்.
இதற்கே பூர்வ ஜென்மத்தில் என்ன புண்ணியம் பன்னினோமோ என்று நமக்கு நாமே மார்தட்டிக்கொள்வோம். நினைத்துப்பாருங்கள் அந்த பரமேஸ்வரனுடையே தூங்கி சாப்பிட்டு வாழ்ந்து கைங்கர்யம் செய்தே வாழ்க்கையை கழித்துக்கொண்டிருக்கும் குமரேசன் மாமாவும் மாமியும் எத்தனை புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்.
மஹாபெரியவா வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தும் ஒரு முறை கூட தரிசனம் செய்யவில்லையே என்னும் ஏக்கமே இனிமேல் உங்களுக்கு வேண்டாம். மஹாபெரியவளுக்கு அன்று தொடங்கி இன்று வரை கைங்கர்யம் செய்யும் அணுக்கத்தொண்டர்களில் ஒருவரான குமரேசன் மாமாவை ஒரு முறை காஞ்சி சென்று இரு பெரியவாளையும் சேவித்து குமரேசன் மாமாவையும் பார்த்துவிட்டு மஹாபெரியவளின் அதிஷ்டானத்தில் அமைதியாக அமர்ந்து ஒரு மணி நேரம் த்யானம் செய்தால் உங்கள் மனதுக்கு அமைதி மட்டுமில்லை உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வும் கிடைக்கும் என்பது நிச்சயம்.
இன்னும் என்ன யோசனை.
உடனே கிளம்புங்கள் காஞ்சிக்கு
நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு
ஒரு தீர்வை காணுங்கள்
வாருங்கள் குமரேசன் மாமா தான் அனுபவித்த அற்புத அனுபவங்களை உங்களுடன் காணொலி மூலம் பகிர்ந்துகொள்ள காத்திருக்கிறார்.இந்த காணொளியிலிருந்து ஒரு சில அற்புதங்களை உங்களுக்காக எழுதுகிறேன்.
மஹாபெரியவா விஸ்வரூப தரிசனம் காணுங்கள்.
அற்புதம்-1
கோவில் கோபுரத்தின் உச்சியிலிருந்து
கீழே விழுந்தால் என்ன ஆகும் தெரியுமா
குமரேசன் மாமா விழுந்தார்
மேலே படியுங்கள் மீதியை காணொளியில் காணுங்கள்
ஒரு முறை மஹாபெரியவா காஞ்சி பிரும்மபுரீஸ்வரர் கோவிலின் கோபுரத்தின் மேல் ஏறி கார்த்திகை தீபத்திற்கு விளக்கு ஏற்றச்சொன்னார். மாமாவும் மேலே ஏறி தீபம் ஏற்றி விட்டார். கீழே இறங்கும் பொழுது கால் இடறி கோபுரத்தின் உச்சிலிருந்து தலை கீழாக விழும் பொழுது பரமேஸ்வரன் எப்படி மாமாவை தாங்கி பிடித்து காப்பாற்றினார் என்பது அதிசயத்திலும் அதிசயம். நீங்களும் காணொளியை பார்த்து அதிசியுங்கள்.
அற்புதம்-2
முன் பின் தெரியாதவர்களுக்கு
அவர்கள் இறந்து விட்டால்
நீங்கள் மோக்ஷ தீபம் ஏற்றுவீர்களா
மஹாபெரியவா உத்தரவின் பேரில்
குமரேசன் மாமா எத்தனை ஆயிரம்
மோக்க்ஷ தீபம் ஏற்றினார்
காணொளியை பார்த்து நீங்களும் அதிசியுங்கள்
இன்னும் எத்தனையோ அடுக்கிக்கொண்டே போகலாம். பார்வை இழந்த அக்காவிற்கு பார்வை கிடைத்த அதிசயம், சிறிய குழந்தைக்கு தலையில் கரப்பான் என்று தோல் வியாதி வந்து ஒரு தேங்காயில் எப்படி சரியானது, குழந்தை பருவம் கூட கடக்காத குமரேசன் மாமாவுக்கும் மாமிக்கும் எப்படி கன்னிகாதானம் நடந்தது என்பதை எல்லாம் இந்த காணொளியில் கண்டு மஹாபெரியவளின் தரிசனத்தை அனுபவியுங்கள்
கீழே காணொளி லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. கண்டு அனுபவியுங்கள்
. https://www.youtube.com/watch?v=ChZt-TV5vWQ&t=2860s
Play time: 56 minitues 53 seconds
விதைத்தவன் உறங்கினாலும்
விதை உறங்காது
மஹாபெரியவா அன்று விதைத்த
விதைகளில் ஒன்று குமரேசன் மாமா
முளைத்த விதை
இன்றும் வரை ஓயாமல்
வளர்ந்து கொண்டேயிருக்கிறது
Hara Hara Shankara Jaya Jaya Shankara
காயத்ரி ராஜகோபால்
மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-033
மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-033
பிரதி செவ்வாய்க்கிழமை தோறும்
இறைவனின் அவதாரங்கள்
எத்தனையோ
நாம் இப்பொழுது ஒரு அவதாரத்தையாவது காண இயலுமா
நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்த
பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவளை பார்த்திருக்கிறோம்
இறைவனின் குரலை கேட்டிருக்கிறோம்
நம் தேவைகளை சொன்னால்
உடனே தருவதையும் அனுபவித்திருக்கிறோம்
அப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான் இந்த பதிவு
ஒரு வயதான தம்பதியினர். கணவர் கிருஷ்ணமூர்த்தி அரசாங்க உத்யோகத்தில் இருப்பவர். இவருடைய மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற ஒரு பெண். திருமணமாகி எல்லா சடங்குகளும் செய்தாகி விட்டது.பெண்ணும் தாயாகும் பாதையில் பயணித்து கொண்டிருந்தாள்.
பிரசவமாகும் நாளும் வந்தது. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினருக்கு அப்படியொரு சந்தோஷம். இருக்காதா பின்னே!. ஒரு மனிதன் எப்பொழுது பூரணத்துவம் அடைகிறான் தெரியுமா? பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்னும் வாழ்த்தில் பதினாறாவது செல்வம் பேரனை பெறுவது.இதைப்பற்றி என்னுடைய இந்து மதம் ஒரு வாழும் முறை பதிவில் எழுத்தின் இருந்தேன்.
சுப்ரமணியன் எல்லா குழந்தைகளையும் போல் நன்றாகவே தவழ்ந்தான். தாத்தாவும் பாட்டியும் இரு வேறு இடங்களில் உட்கார்ந்து கொண்டு பேரன் சுப்பிரமணியத்தை அழைப்பார்கள். பேரனும் தாத்தாவுக்கும் இடையே உள்ள தூரத்தை தவழ்ந்து தவழ்ந்து வருவதை கண்களில் ஆனந்த கண்ணீருடன் ரசித்தார்கள். பேரனை அள்ளி உச்சி முகந்தார்கள்.இது வரை சரி.
இதற்கு மேல்தான் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பேரன் மெதுவாக பிடித்து கொண்டு நிற்கும் பருவம். நிற்க முடியவில்லை. நிற்க முயலும் பொழுது கால்கள் மடங்கி கீழே விழுந்து விடுவான். குழந்தைகள் தத்தி தத்தி நடை பயிலும் தருவாயில் கீழே விழுவதும் மீண்டும் எழுவதும் சகஜம் தானே என்று நீங்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.
நீங்கள் நினைப்பது சரியே. எதுவரை என்றால் ஒரு வயது வரை. ஆனால் இரண்டரை வயதாகியும் பேரன் சுப்ரமணியனால். எழுந்து நிற்க முடியவில்லை.. இறைவன் எல்லா சந்தோஷத்திலும் ஒரு குறையை வைப்பான் என்பதை நாம் சொல்ல கேள்ளிவிபட்டிருக்கிறோம். . ஆனால் இந்த குறை நெஞ்சை கசக்கி பிழியும் சோகமல்லவா.
தாத்தாவும் பாட்டியும் வயதான காலத்தில் தங்கள் சோகத்தை கூட மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. யார் என்ன சமாதானம் சொல்ல முடியும்.. வேண்டும் வரை இறைவனிடம் முறையிட்டார்கள்.
ஆனால் எந்த பதிலும் கிடைக்க வில்லை..சுற்றமும் சொந்தங்களும் பயமுறுத்தினார்கள். வேண்டமென்றே இல்லை. வேறு என்னசொல்ல முடியும். அவர்கள் சொன்னது இதுதான்.
பேரன் சுப்பிரமணியனை இப்படியே விட்டுவிட்டால் இருபத்தி ஐந்து வயதில் அவனுக்கென்றே ஒருவர் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட வேண்டும். . அவனை எதாவது ஒரு நல்ல மருத்துவரிடம் காண்பியுங்கள் என்று ஆலோசனை செய்து விட்டு சென்று விடுவார்கள்.
ஏதற்கும் ஒரு நேரம் காலம் வரவேண்டுமல்லவா. காலமும் வந்தது.நேரமும் வந்தது. கிஷ்ணமூர்த்தியின் குடும்ப நண்பர் ஒருவர் மஹாபெரியவாளை பற்றி சொல்லி அந்த பரமேஸ்வரன் மனது வைத்தால் எல்லாம் நல்ல படியாக முடியும். உங்கள்பேரன் நடக்க ஆரம்பித்து விடுவான்.என்றார்.
கிருஷ்ணமூர்த்தி தம்பதியினருக்கு அந்த இறைவனே நேரில் வந்து சொன்னது போல இருந்தது. நாம் ஒரு இக்கட்டில் இருக்கும் போது எல்லா வழியும் அடைபட்ட பிறகு ஒரு சிறு நம்பிக்கை கூட கடவுளாக காட்சியளிக்கும். அப்படிதான் இவர்களுக்கும். மஹாபெரியவா பரமேஸ்வரனாகவே காட்சி அளித்தார். இவர்களுக்கு அவ்வளவாக மஹாபெரியவாளை பற்றி தெரியாது.
ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்து வாடகை கார் அமர்த்திக்கொண்டு காஞ்சிபுரம் சென்றனர். அன்று மடத்தில் ஏகப்பட்ட கூட்டம்.வழக்கத்தை விட கூட்டம் அதிகம். எல்லோரும் வரிசையில் நின்று தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.
தாத்தா கிருஷ்ணமூர்த்தி பேரனை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டே வரிசையில் நகர்ந்து கொண்டே இருந்தார். கூட்டத்தை பார்த்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இன்னொருநாளில் வந்து மஹாபெரியவாளை சாவகாசமாக தரிசனம் செய்து விட்டு அப்பொழுது தங்களுடைய பேரன் பிரச்னையை சொல்லி விடலாம் என்று நினைத்தார்.
தாத்தா நினைப்பதை மஹாபெரியவா நன்றாக படித்து விட்டார். இவர்களின் முறையும் வந்தது.கூட்டம் அதிகமாக இருந்ததால் கைங்கர்யம் செய்பவர்கள் நகருங்கள் என்று கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார். மஹாபெரியவா தன்னுடைய ஒரு விரலால் அந்த கைங்கர்யம் செய்பவரை கண்டித்தார்.
இந்த சமயத்தில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மஹாபெரியவாளிடம் பேரனுடைய பிரச்னையை சொல்ல முயன்றார். மஹாபெரியவா அவரை நிறுத்த சொல்லிவிட்டு ஒரு ரஸ்தாளி வாழைப்பழத்தை உரித்து பேரன் சுப்ரமணியத்திடம் நீட்டினார்.
கிருஷ்ணமூர்த்தியும் பேரன் சுப்பிரமணியத்தை குனிந்து மஹாபெரியவா அருகில் வாழைப்பழத்தை வாங்கும் படி கொண்டு போனார். பேரனும் பழத்தை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான்.
அங்கு கூடியிருந்த பக்தர்கள் எல்லோரும் குழந்தை சுப்பிரமணியத்தை ஆசையோடு பார்த்தார்கள். மஹாபெரியவாளே வாழை பழத்தை உரித்து குழந்தையின் கையில் கொடுத்தால் அந்த குழந்தை எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமா. அந்த குழந்தை நடந்திருக்கும் என்று.
காஞ்சியில் மஹாபெரியவாளிடம் விடை பெற்றுக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் தங்களுடைய வீட்டிற்கு திரும்பினர். வீடு வந்து சேந்த சில நாட்களில் நண்பர் ஒருவர் இந்த மாதிரி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ஒரு மருத்துவமனை இருப்பதாகவும் அங்கு சுப்பிரமணியனை கொண்டு சேர்க்க சொல்லி பயிற்சி கொடுக்க சொன்னார்.
குழந்தை சுப்பிரமணியமும் அந்த மருத்துவமனையில் சேர்ந்து பயிற்சி எடுத்து கொண்டான். இன்று பேரன் சுப்ரமணியத்திற்கு வயது இருபத்திநாலு ,அவருக்கு இணையாக யாரும் நடக்க முடியாது. அவ்வளவு ஒரு வேகம் நடையில்.
நடக்கும் என்பர் நடக்காது
நடக்காது என்பர் நடந்து விடும்
இது நம்முடைய லௌகீக வாழ்க்கையில்
மஹாபெரியவா இறை சாம்ராஜ்யத்தில்
நிச்சயம் எதுவும் நடக்கும்
என்ற எழுதப்படாத விதி
இங்கு நடக்காது என்பதற்கு
இடமே இல்லை
இந்த இறை சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி
பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா
ஹர ஹர சங்கர ஜய ஜய சக்கர
காயத்ரி ராஜகோபால்
குரு பூஜை அற்புதங்கள்-14-பாகம்-II- சந்தரமதி
குரு பூஜை அற்புதங்கள்-14-பாகம்-II-சந்தரமதி
பிரதி திங்கள் தோறும்
மஹாபெரியவா ஆசிர்வாதம்
என்பது முழுமையானது
மஹாபெரியவா நம் வாழ்க்கையில்
ஒரு அடி எடுத்துவைத்தால்
இம்மை மறுமை இக வாழ்வு புற வாழ்வு
முக்கால வாழ்வு அனைத்தும் புனிதமடையும
எந்த ஒரு தாய்க்கு தன் மகனுக்கோ மகளுக்கோ திருமணம் செய்து பார்ப்பது என்பது அவள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான தருணம். சந்தரமதியும் ஒரு தாய் என்ற ஸ்தானத்தில் மிகவும் மகிழ்சியாகவே இருக்கிறாள். பெண்ணும் பையணும் ஒருவருக்கொருவர் பார்த்து இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப்போயிருந்தது.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் சந்தரமதி எதிர்பார்த்தது கல்யாணத்திற்கு நிச்சயம் ஒரு ஆறு மாசமாவது அவகாசம் கிடைக்கும். இந்த நேரத்தில் சற்று ஆற அமர யோசித்து பணத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் நடந்தது என்ன? நாற்பத்தைந்து நாட்களுக்குள் சத்திரம் பார்த்து நல்ல நாள் பார்த்து கல்யாணம் செய்து வைக்க வேண்டிய நிர்பந்தம்.
மஹாபெரியவா ஆசிர்வதமென்பது பிரச்சனைக்கு எதிர்பாராத ஒரு தீர்வு தானே. . எப்படியும் எதுவும் நடக்கும்
எப்பொழுது எது வேண்டுமானாலும் நடக்கலாம்
எப்படி என்பது நூற்றுக்கு நூறு உண்மையோ
அப்படி எப்படியும் நடக்கும் என்பதும் உண்மையே
எங்கிருந்து யார் வந்து உதவி செய்வார்கள் என்பது
யாருக்கும் எவருக்கும் தெரியாத தேவ ரகசியம்
ஆனால் நடக்கும் என்பது சர்வ நிச்சயம்
சந்தரமதி தன்னுடைய பயத்தையும் கஷ்டங்களையும் விலாவரியாக என்னிடம் சொன்னாள். ஆனால் என்னுடைய மஹாபெரியவா நம்பிக்கை என்பது
அந்த வானத்தை கூட வில்லாக வளைத்து விடலாம்
கடலை கூட வற்ற வைக்கலாம்
மலையையும் பெயர்த்து விடலாம்
எதுவும் சாத்தியமே
நான் சந்தரமதிக்கு புரிய வைத்தேன். மஹாபெரியவா அனுக்கிரஹம் என்பது ஏதோ அப்போதைக்கு மற்றவர்கள் செய்யும் ஆசிர்வாதம் போல அல்ல. மஹாபெரியவா ஆசிர்வாதம் என்பது நூறு வருடங்கள் ஆனாலும் அந்த ஆசிர்வாதம் யாருடைய வாழ்க்கையும் சரியான பாதையில் அழைத்துச்செல்லும். அவ்வளவு தீர்க்கமானது. நேர்தியானது
முக்காலமும் உணர்ந்த அறிந்த
பரமேஸ்வரன் அல்லவா
நம்முடைய மஹாபெரியவா
இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். கல்யாண ஏற்பாடுகளை தைரியமாக செய். யார் எப்படி எப்போது உதவி செய்வார்கள் என்பது எனக்கும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரியும். உனக்கு தேவையான பண உதவி யார் மூலமாவது வந்து சேரும் என்பது நிச்சயமாக எனக்கு தெரியும் என்று என்னுடைய நம்பிக்கை நக்ஷ்த்திரமான மஹாபெரியவளை வேண்டிக்கொண்டு சொன்னேன்.
அவளும் சரியென்று சொல்லி என் வீட்டில் உள்ள மஹாபெரியவாளை விழுந்து நமஸ்காரம் செய்து விட்டு கிளம்பினாள். சந்தரமதி ஒரு பெரிய பட்டியல் தயார் செய்ய ஆரம்பித்தாள். அவள் வேலை செய்யும் வீடுகள், தெரிந்த நண்பர்கள், தெரிந்த பணக்காரர்கள் என்று எல்லோரிடமும் மொத்தமாக ஒரு லக்க்ஷம் ருபாய் கடனாக வாங்கி கல்யாணம் முடிந்தவுடன் எல்லோரிடமும் மாதாந்திர தவணையாக கட்டிவிடலாம் என்று முடிவு செய்தாள்.
பக்தி விதைகளை எல்லோர்
இதய மண்ணிலும் தூவினால்
வளர்வது தனி மனித பக்தியல்ல
ஒரு சமுதாய பக்தி
சந்திரமதி மட்டும் விதிவிலக்கா என்ன
தூவினேன் தனி மனித பக்தி குடும்ப பக்தியானது
பல குடும்பங்கள் ஒன்றிணைந்ததுதானே சமுதாயம்
ஆனால் அவளுக்கு இரண்டு சந்தேகங்கள். ஒன்று கேட்ட பணம் வசூலாகுமா. பணம் கிடைத்தாலும் மாதா மாதம் பணம் கட்டிவிட்டு குடும்பம் எப்படி சாப்பிடும் என்ற கவலையில் சரியாக கூட சாப்பிடாமல் வேலை செய்தாள்.
நான் அவளிடம் மஹாபெரியவாளை பற்றி எடுத்துச்சொல்லி தைரியமாக இருக்குமாறு சொன்னேன். நான் சொன்னேன் என்னை உதாரணத்திற்கு எடுத்துக்கொள். கண்கூடாக நீயும் பார்க்கிறாய் எப்படியெல்லாமோ இருந்தேன். இதுதான் இனிமேல் உனக்கு வாழ்கை என்று சொல்லி என்னுடைய எல்லா வகையற்ற உணவு பழக்கவழக்கங்களுக்கு ஒரே இரவில் மஹாபெரியவா முற்றுப்புள்ளி வைத்து காண்பித்தார்.
தரையில் தவழ்ந்து கொண்டிருந்த என்னை எழுந்து நடக்க வைத்து ஒரு கை ஒரு கால் மூலமாக வீட்டில் அத்தனை பேருக்கும் இன்று சமைத்து போடுவேன் என்று நீ நினைத்து பார்த்தாயா. ஆனால் எல்லாமும் நடக்கிறதே. இதற்கு மேல் உனக்கு என்ன வேண்டும். தைரியமாக இறங்கு. உனக்கு உதவி எப்படி வரும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் சரியான நேரத்தில் தேவையான பணம் உன்னை வந்தடையும் என்று சொன்னவுடன் கண்கள் கலங்க விடை பெற்றுச்சென்றாள்.
கல்யாணத்திற்கு இன்னும் இருபது நாட்கள் கூட இல்லை.யாரிடமும் பணம் கேட்கவில்லை.பணம் கிடைத்தாலும் எப்படி திரும்ப கொடுக்கமுடியும் என்ற கவலை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நானும் மஹாபெரியவாளிடம் சென்று கீழ்வருமாறு வேண்டினேன்.
“பெரியவா சந்தரமதி செய்வதறியாமல் தவிக்கிறாள். அவளுக்கு அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா.” என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன். எனக்கு மஹாபெரியவா கொடுத்த பதில் இதுதான்
“ஏன்டா அவளுக்கு நான் அனுக்கிரஹம் தான் செய்ய முடியும். நானே எல்லோரிடமும் அவளுக்காக பணம் கேட்க முடியுமா. அவளையே தெரிஞ்சவாளிடத்தில் பணம் கேட்கச்சொல். எல்லாம் நல்லபடியா முடியும் என்று சொல்லி தன் பதிலை முடித்துக்கொண்டார்.
எனக்கும் நான் பண்ணது தப்பு என்று பட்டது. நான் சந்தரமதியிடம் அறிவுரை சொன்னேன். நீ தெரிந்தவர்களிடம் போயி பணம் கேட்காமலேயே இருந்தால் அடுத்து என்னசெய்யவேண்டும் என்பது தெரியாமல் போய்விடும். நேரம் குறைந்து கொண்டே வருகிறது.
மஹாபெரியவாளும் கேட்க்கும் இடத்தில பணம் கேட்டால் பணம் கிடைக்கும். வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்கவும் மஹாபெரியவா அனுக்கிரஹம் செய்வார். முதலில் நேரம் கடத்தாமல் பணம் ஏற்பாடு செய்ய ஆரம்பி. எல்லாம் சரியாகிவிடும். மறு நாள் புதன் கிழமை. உன்னுடைய வேலையை ஆரம்பி என்று சொல்லி அவளை வீட்டிற்கு அனுப்பிவைத்தேன்.
அற்புதம்
புதன்கிழமை -காலை மணி நான்கு
புதன் கிழமை விடிந்தது. காலை மணி நான்கு. ஏதோ என் பிரச்சனை போல் நினைக்க ஆரம்பித்து விட்டேன்.மஹாபெரியவாளிடத்தில் மனமுருக கண்களில் கண்ணீர் வடிய நின்று கொண்டிருந்தேன் மஹாபெரியவா பதிலுக்காக.
மஹாபெரியவா கீழ் வருமாறு சொன்னார்.
“சந்தரமதிக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் இந்தக்கல்யாணம் நடக்கும். சூரிய அஸ்தமனத்துக்குள் அவளுடைய கவலையும் காணாமல் போகும் என்று சொல்லி தன்னுடைய பதிலை முடித்துக்கொண்டார்.
புதன்கிழமை மாலை மணி ஆறு.
சந்திரமதி என்னை பார்க்க வந்தாள். அவள் முகத்தை பார்த்தால் ஒரு நிம்மதி ரேகை ஓடியது. அவள் பின் வருமாறு சொன்னாள்.
“எல்லா வீட்டிற்கும் சென்று உட்கார்ந்து ஆற அமர ஒரு புது வித உத்வேகத்துடன் பணம் கேட்க ஆரம்பித்தேன். அவர்கள் எல்லோரும் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார்கள். நானும் உங்களால் முடிந்த பணத்தை கொடுங்கள். நான் சிறுக சிறுக மாதா மாதம் கொடுத்து அடைத்து விடுகிறேன் என்று சொன்னேன்.
ஆனால் எல்லோரும் ஒரே குரலாக ஒன்று சொன்னார்கள். சந்திரமதி உன்னால் திரும்ப கொடுக்க முடியாது. நீ மிகவும் கஷ்டப்படுவதை நாங்கள் பார்க்கமுடியாது. இதுனால எங்களால் முடிந்த பணத்தை உனக்கு கொடுத்து உதவி செய்கிறோம். இந்த பணத்தை நாங்கள் பெண்ணுக்கு கொடுத்த மொய் பணமாக வைத்துக்கொள்.
இப்படியே வசூலான மொத்த பணம்
எவ்வளவு தெரியுமா
ஒரு லக்க்ஷத்து எழுபத்தைந்து ஆயிரம் ருபாய்
இந்த பணம் ஒரு பகுதிதான். கல்யாணப்பெண் வேலை பார்க்கும் அலுவலகத்தில் எல்லோரும் சேர்ந்து ஒரு லக்க்ஷ ரூபாயும் அவர்களுடைய தேன் நிலவிற்கு கேரளாவிற்கு போக வர குளிர் வசதியுடன் கூடிய பயணசீட்டு முன் பதிவு செய்தும் கொடுத்தார்கள்.
கல்யாணம் மட்டுமில்லாமல் கல்யாண வரவேற்பு தனியாக சென்னையில் ஒரு “எ” வகுப்பு ஹோட்டலில் சீருடை அணிந்த சர்வர்களுடன் சாப்பாடு பரிமாற ஏகோபித்த மஹாபெரியவா அனுகிரஹத்துடனும் ஆசிர்வாதத்துடனும் நினைத்துப்பார்க்கமுடியாத அளவில் கல்யாணம் நடந்தது.
இந்த அற்புதத்தை என் கண்ணால் கண்ட பிறகு என்னால் அழுது கதறாமல் இருக்கமுடியவில்லை. மஹாபெரியவா முன் நின்று என் கண்கள் சிந்தும் கண்ணீரை மஹாபெரியவாளின் பொற்பாதங்களில் காணிக்கையாக சாம்ப்பித்தேன்.
சற்று சிந்தித்துப்பாருங்கள் சந்திரமதி ஒரு மஹாபெரியவா பரம்பரையை பின்புலமாக கொண்ட பக்தை கிடையாது. ஒரு ப்ராமணப்பெண்ணும் இல்லை. என்னுடைய வாழ்க்கை மாற்றங்களை பார்த்து மஹாபெரியவா பக்தையாக மாறியவள். அவள் மட்டுமல்ல அவள் கணவன் இரு மகள்கள் எல்லோருமே மஹாபெரியவா பக்தர்களாகி விட்டனர்.
மஹாபெரியவா ஜாதியை பார்ப்பதில்லை
பரம்பரையை பார்ப்பதில்லை
சமுதாய அந்தஸ்தை பார்ப்பதில்லை
பார்ப்பது ஒன்றே ஒன்று தான்
மனித ஆத்மா
கெட்டவனை கூட நல்லவனாக்கி
அவனுக்கும் சமுதாயத்தில் ஒரு
அந்தஸ்த்தையும் அங்கீகாரத்தையும்
எற்படுத்தி கொடுத்து
நல்ல மனித ஆத்மாவாக
மாற்றி வாழ வைப்பதை
என்னவென்று சொல்ல
நான் சந்தரமதியிடம் சொன்னது இதுதான்.” இந்த நன்றிக்கடனை மஹாபெரியவாளுக்கு எந்த விதத்திலும் திருப்பி செலுத்த முடியாது. ஆனால் உன்னை போல் யாராவது கஷ்டத்தில் இருந்தால் அவர்களுக்கு மஹாபெரியவாளின் வழியை காட்டி உன் நன்றிக்கடனை தீர்த்துக்கொள்.என்று சொல்லி மணமக்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தேன்.
மஹாபெரியவா
ஸ்தூலத்தின் அற்புதத்தை விட
சூஷ்மத்தின் அற்புதம்
விண்ணையும் தொட்டுவிடும்
இதற்கு என்ன விலை தெரியுமா
உங்கள் குறையாத நம்பிக்கையும்
உருகும் பக்தியும் தானே
****
சந்திரமதி அடுத்த வாரமும் வருவாள்
மற்றுமொரு அற்புத அனுபவத்தோடு
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்
திவ்ய தேச தரிசனம்-003 தஞ்சை மாமணிக்கோவில்
திவ்ய தேச தரிசனம்-003
தஞ்சை மாமணிக்கோவில்
பெருமாள்:நீல மேகப்பெருமாள் தாயார் : செங்கமலவல்லி தாயார்
ஸ்வாமி: நீல மேகர்- வீர நரசிம்மர்- மணிக்குன்றர்
அம்பாள் : செங்கமலவல்லி- அம்புஜவல்லி- தஞ்சை நாயகி
மூர்த்தி : சக்கரத்தாழ்வார்
-
நீலமேகப்பெருமாள் கோவிலில் அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.அம்பாள்: செங்கமலவல்லி தாயார்
-
அருள்மிகு மணிக்குன்ற பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார் தாயார் அம்புஜவல்லி அருள் பாலிக்கிறார்.
-
வீரநரசிம்மப்பெருமாள் கோவிலில் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் வீரநரசிங்கபெருமாள் நரசிம்மன் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். தாயார் தஞ்சை நாயகி கூடவே பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.
-
சிங்கப்பெருமாள் கோவில் வீர நரசிம்மர் முன் மண்டபத்தில் யோக நரசிம்மர், நீலமேகப்பெருமாள் கோவில் ப்ரஹரத்தில் இருக்கும் லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர் தாயார் சன்னதியில் உள்ள தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் என இந்த திவ்ய தேசத்தில் பஞ்ச நரசிம்ஹர்கள் அருள் பாலிக்கின்றனர்.
-
வீர நரசிம்மர் கோவில் சக்கரத்தில் பெருமாளே சக்கரத்தாழவராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.சக்கரத்தழுவார் வலது புறம் இருக்கும் யானையின் மீது கை வைத்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்பலிக்கிறார்.
-
இந்த அமைப்பு யானை வடிவம் எடுத்த தஞ்சகாசுரனையும் அவன் திருந்தி பெருமாளை வணங்குவது போலவும் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
இவரின் பின் புறத்தில் நரசிம்மர் யோக பட்டையுடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
-
நரசிம்மரின் இரு புறமும் ஹிரண்யகசிபு பிரஹலாதன் இருக்கின்றனர்.இங்கு சக்கரத்தாழ்வாரின் வடிவத்தில் பெருமாளை சேவிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம் கன்னிகா புஷ்காரனி வெண்ணாறு , ராம தீர்த்தம் சூர்ய புஷ்கரணி
தல விருக்ஷம்: மகிழ மரம்
தல சிறப்பு: பெருமாளின் நூற்றி எட்டு வைஷ்ணவ திருத்தலங்களில் இது மூன்றாவது ஸ்தலமாகும்.இந்தக்கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.
மங்களாசாசனம் : நம்மழவார் பூத்ததழுவார் திருமங்கையாழிவார் இவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
(அழவார் என்னும் வார்த்தை நான் உபயோக படுத்தும் மொழிமாற்றியில் சரியான முறையில் வரவில்லை.ஆகவே பிழை என்று தெரிந்தும் அப்படியே பதிவில் வெளியாகி இருக்கிறது.பிழைக்கு பொருத்தருளவும்).
ஸ்தல வரலாறு : திரேதா யுகத்தில் தஞ்சகன் தாடகன் தண்டகன் என்ற மூன்று அசுரர்கள் இருந்தனர். இவர்கள் மூவரும் தீவிரக தவம் செய்து சிவபெருமானால் தங்களுக்கு எந்த தீங்கும் நேராத வண்ணம் வரம் பெற்றனர். அகங்காரத்தின் உச்சத்தில் பராசர முனிவர் வெண்ணாற்றங்கரையில் குடில் அமைத்து அவருடைய தவ வாழ்க்கையை கழித்துக்கொண்டிருந்தார்.
மூன்று அசுரர்களும் இவருடைய அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு செய்தனர்.. பராசர முனிவரும் பெருமாளை நோக்கி தவம் செய்து பெருமாளும் காட்சி தரவே பெருமாளிடம் தன்னுடைய இன்னல்களை கூறினார்.
பெருமாளும் தன்னுடைய கருடாழ்வருடன் இந்த மூன்று அசுரர்களை அழிக்க வந்தார். இதில் தஞ்சகன் யானையாக மாறி பெருமாளுடன் போரிட்டான். பெருமாளும் நரசிம்ம யழியாக தோன்றி தஞ்சகன் என்னும் யானையுடன் போரிட்டு அழித்தார்.இந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் இந்த ஊருக்கு தஞ்சகன் என்று பெயர் வந்தது. பின்னாளில் அது மருவி தஞ்சாவூர் என்ற பெயர் பெற்றது.
இந்த கோவில் தஞ்சை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் உள்ளது. இங்கு தங்கிக்கொண்டு அருகிலிருக்கும் திவ்ய தேசங்களுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களுக்கும் சென்று தரிசனம் கண்டும் நம்முடைய வரலாற்று சிறப்பு மிக்க கலை நயங்களையும் கண்டு வாருங்கள். மறக்காமல் உங்கள் குழந்தைகளுக்கும் காண்பியுங்கள் சொல்லிக்கொடுங்கள்.
உங்கள் பயணம் இனிதே அமையவும் உங்கள் பிரார்த்தைகள் அணைத்தும் நிறைவேறி வளமான வாழ்வு வாழ நான் உங்களுக்காக மஹாபெரியவாளை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க்கையில் பயம் அகலட்டும் மனா நிம்மதி உங்களுக்கு சாஸ்வதமாக இருக்கட்டும்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்
என் வாழ்வில் மஹாபெரியவா -036 – பாகம்—II
என் வாழ்வில் மஹாபெரியவா -036 – பாகம்—II
பிரதி வியாழக்கிழமை தோறும்
வாழ்கை என்னும் பயணத்தில்
பாதி தூரம் கடக்கும் பொழுது
மீதி தூரத்தை கடக்க
இறைவனின் துணை இருந்தால்
வாழ்கை பயணம் இனிதே முடியும்
இது என் அனுபவ மொழி
அற்புதத்தின் துவக்கம்:
அப்பொழுதெல்லாம் நன் காலையில் எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பேன். காபியை குடித்து விட்டு அன்றைய செய்தித்தாளை படித்து விட்டு தொலை காட்சியில் மூழ்கி விடுவேன், பிறகு மதியம் குளித்து விட்டு மதித்த உணவை முடித்துவிட்டு படுக்க சென்று விடுவேன்.
இந்த நிலையில் தான் மஹாபெரியவா எனக்கு செய்த பல அற்புத அனுபவங்களை உங்களுடன் இன்றும் பகிர்ந்து கொண்டு வருகிறேன். நான் நடந்ததில் இருந்து எல்லாவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன் .
இனிமேல் மஹாபெரியவா என்னை எப்படி எல்லாம் மாற்றினார் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.. அந்த அற்புதங்களை
-
சரீர சுத்தி அற்புதங்கள்
-
ஆத்மசுத்தி அற்புதங்கள்
-
பூர்ண சுத்தி அற்புதங்கள்